×

“நீங்கள் நலமா’’ புதுமை திட்டத்தில் அரசின் திட்டங்கள் குறித்து கலெக்டர் கருத்து கேட்பு

மயிலாடுதுறை, மார்ச் 8: தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளை தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்டறியும் புதுமைத் திட்டமான “நீங்கள் நலமா” என்ற திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி பல்வேறு துறைகளின் மூலம் அரசின் நலத்திட்டங்களை பெற்ற பயனாளிகளை கைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

முதல்வரின் முகவரி துறையின் கீழ், பயனாளிகளை தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறியும் புதுமையான திட்டமான “நீங்கள் நலமா” என்ற திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் முகாம் அலுவலகத்திலிருந்து தொடங்கி வைத்தார். பின்னர் பயனாளிகளிடம் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துக்கள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னோட்டங்களை கேட்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக புதுமைப்பெண் திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டம், வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் திட்டம், குடிநீர் இணைப்பு தொடர்பாக, பிறப்பு சான்றிதழ்கள் மற்றும் சாதி சான்றிதழ்கள் போன்றவைகள் குறித்து பயனாளிகளிடம் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துக்கள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்து உரிய காலத்தில் தங்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி பேசினார்.

நீங்கள் நலமா திட்டத்தின் மாவட்ட கலெக்டர் தங்களை தொடர்பு பேசிதால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post “நீங்கள் நலமா’’ புதுமை திட்டத்தில் அரசின் திட்டங்கள் குறித்து கலெக்டர் கருத்து கேட்பு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Chief Minister of Tamil ,Nadu ,Tamil Nadu government ,District Collector ,Dinakaran ,
× RELATED பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது...